“What bolt can bar true love in fact The tricking tears reveal the heart”
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
❤️ Explore by topic
அன்பும் காதலும்
Love as a virtue and the intimate emotions of attraction, union, longing, separation, and reconciliation. Explore 260 relevant Kurals in Tamil and English, organized from the authentic Thirukkural chapter structure.
Open any Kural for translations, commentary, pronunciation, collections, and study tools.
“What bolt can bar true love in fact The tricking tears reveal the heart”
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
“To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones”
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
“Soul is encased in frame of bone To taste the life of love alone”
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
“Love yields aspiration and thence Friendship springs up in excellence”
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
“The crowning joy of home life flows From peaceful psychic love always”
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
“\"Love is virtue's friend\" say know-nots It helps us against evil plots”
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
“Justice burns the loveless form Like solar blaze the boneless worm”
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
“Life bereft of love is gloom Can sapless tree in desert bloom?”
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
“Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove”
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
“The seat of life is love alone; Or beings are but skin and bone!”
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
“Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!”
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
“The counter glances of this belle Are armied dart of the Love-Angel”
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
“Not known before -I spy Demise In woman's guise with battling eyes”
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
“This artless dame has darting eyes That drink the life of men who gaze”
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
“Is it death, eye or doe? All three In winsome woman's look I see”
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
“If cruel brows unbent, would screen Her eyes won't cause me trembling pain”
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
“Vest on the buxom breast of her Looks like rutting tusker's eye-cover”
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
“Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet”
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
“Which jewel can add to her beauty With fawn-like looks and modesty?”
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
“To the drunk alone is wine delight Nothing delights like love at sight”
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
“Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart”
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
“Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore”
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
“She looked; looking bowed her head And love-plant was with water fed”
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
“I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile”
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
“No direct gaze; a side-long glance She darts at me and smiles askance”
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
“Their words at first seem an offence But quick we feel them friendly ones”
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
“Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks”
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
“What a grace the slim maid has! As I look she slightly smiles”
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
“Between lovers we do discern A stranger's look of unconcern”
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
“The words of mouth are of no use When eye to eye agrees the gaze”
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
“In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell”
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
“The cure for ailment is somewhere For fair maid's ill she is the cure”
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
“Is lotus-eyed lord's heaven so sweet As sleep in lover's arms so soft?”
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
“Away it burns and cools anear Wherefrom did she get this fire?”
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
“The arms of my flower-tressed maid Whatever I wish that that accord”
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
“My simple maid has nectar arms Each embrace brings life-thrilling charms”
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
“Ah the embrace of this fair dame Is like sharing one's food at home”
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
“Joy is the fast embrace that doth Not admit e'en air between both”
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
“Sulking, feeling and clasping fast These three are sweets of lover's tryst”
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
“As knowledge reveals past ignorance So is the belle as love gets close”
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
“Soft blessed anicha flower, hail On whom I dote is softer still”
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
“You can't liken flowers by many eyed, To her bright eyes, O mind dismayed”
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
“The bamboo-shouldered has pearl-like smiles Fragrant breath and lance-like eyes”
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
“Lily droops down to ground and says I can't equal the jewelled-one's eyes”
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
“Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares!”
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
“Stars are confused to know which is The moon and which is woman's face”
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
“Are there spots on the lady's face Just as in moon that changes phase?”
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
“Like my lady's face if you shine All my love to you; hail O moon!”
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத.
“Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon!”
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
“The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair”
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
“Like milk and honey the dew is sweet From her white teeth whose word is soft”
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
“Love between me and this lady Is like bond between soul and body”
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
“Depart image in my pupil Giving room to my fair-browed belle!”
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
“Life with my jewel is existence Death it is her severance”
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
“Can I forget? I recall always The charms of her bright battling eyes”
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
“So subtle is my lover's form Ever in my eyes winking, no harm”
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.
“My lover in my eyes abides I paint them not lest he hides”
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
“My lover abides in my heart I fear hot food lest he feels hot”
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
“My eyes wink not lest he should hide And him as cruel the townsmen chide”
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.
“He abides happy in my heart But people mistake he is apart”
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.
“Pangs of passion find no recourse Except riding *`palmyra horse' * Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs The parents of the lovers first reproach them and then consent to their marriage”
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
“Pining body and mind lose shame And take to riding of the palm”
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
“Once I was modest and manly My love has now Madal only”
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
“Rushing flood of love sweeps away The raft of shame and firmness, aye!”
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
“Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid”
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
“Madal I ride at midnight for My eyes sleep not seeing this fair”
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
“Her sea-like lust seeks not Madal! Serene is woman's self control”
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
“Lust betrays itself in haste Though women are highly soft and chaste”
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
“My perplexed love roves public street Believing that none knows its secret”
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
“Fools laugh at me before my eyes For they feel not my pangs and sighs”
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
“Rumour sustains my existence Good luck! many know not its sense”
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
“Rumour gives me the flower-like belle People know not what rare angel”
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
“I profit by this public rumour Having not, I feel, I have her”
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
“Rumour inflames the love I seek Or else it becomes bleak and weak”
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
“Drink delights as liquor flows Love delights as rumour grows”
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
“One lasting day we met alone Lasting rumours eclipse our moon”
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
“Scandal manures; mother's refrain Waters the growth of this love-pain”
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
“To quench the lust by rumour free Is to quench fire by pouring ghee”
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
“Who said \"fear not\" flared up rumour Why then should I blush this clamour?”
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
“Town raising this cry, I desire Consent is easy from my sire”
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
“Tell me if you but do not leave, Your quick return to those who live”
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
“His sight itself was pleasing, near Embrace pains now by partings fear”
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
“On whom shall I lay my trust hence While parting lurks in knowing ones?”
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
“He parts whose love told me -fear not Is my trust in him at default?”
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
“Stop his parting -my life to save Meeting is rare if he would leave”
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
“His hardness says, \"I leave you now\" Is there hope of his renewed love?”
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
“Will not my gliding bangles' cry The parting of my lord betray?”
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
“Bitter is life in friendless place; Worse is parting love's embrace!”
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
“Can fire that burns by touch burn like Parting of the hearts love-sick?”
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
“Many survive pangs of parting Not I this sore so distressing”
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
“It swells out like baled out spring How to bear this pain so writhing?”
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
“I can't conceal this nor complain For shame to him who caused this pain”
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
“In life -poles of this wearied frame Are poised the weights of lust and shame”
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
“My lust is a sea; I do not see A raft to go across safely”
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
“What wilt they prove when they are foes Who in friendship bring me woes!”
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
“The pleasure in love is oceanful But its pangs are more painful”
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
“Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush”
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
“Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship”
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
“Crueller than that cruel he Are midnight hours gliding slowly”
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
“Like heart, if my sight reaches him It won't in floods of tears swim!”
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
“The eye pointed him to me; why then They weep with malady and pine?”
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
“Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance?”
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?
“Eyes darted eager glance that day It's funny that they weep today”
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
“These eyes left me to endless grief Crying adry without relief”
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
“My eyes causing lust more than sea Suffer that torture sleeplessly”
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
“Lo! eyes that wrought this love-sickness Are victims of the same themselves”
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
“Let tears dry up pining pining In eyes that eyed him longing longing”
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
“Ther's he whose lips loved, not his heart Yet my eyes pine seeing him not”
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
“He comes; no sleep; he goes; no sleep This is the fate of eyes that weep”
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
“Like drum beats eyes declare my heart; From people who could hide his secret?”
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
“My lover's parting, I allowed Whom to complain my hue pallid?”
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
“Claiming it is begot through him Pallor creeps and rides over my frame”
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
“He seized my beauty and modesty Leaving pangs and Pallor to me”
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
“He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame”
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
“My lover departed me there And pallor usurped my body here”
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
“Just as darkness waits for light-off Pallor looks for lover's arms-off”
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
“From his embrace I turned a nonce This pallor swallowed me at once”
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
“On my pallor they cast a slur But none says \"lo he parted her\"”
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
“Let all my body become pale If he who took my leave fares well”
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
“Let people call me all pallid But my lover let them not deride”
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
“Stoneless fruit of love they have Who are beloved by those they love”
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
“The lover-and-beloved's self-givings Are like rains to living beings”
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள க்கும் அளி.
“The pride of living is for those Whose love is returned by love so close”
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
“Whose love is void of love in turn Are luckless with all esteems they earn”
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
“What can our lover do us now If he does not requite our love?”
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
“One sided pains; love in both souls Poises well like shoulder poles”
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
“This cupid aims at me alone; Knows he not my pallor and pain?”
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
“None is so firm as she who loves Without kind words from whom she dotes”
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
“The lover accords not my desires And yet his words sweeten my ears”
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
“You tell your grief to listless he Bless my heart! rather fill up sea!”
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
“Love is sweeter than wine; for vast Is its delight at very thought”
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
“Pains are off at the lover's thought In all aspects this love is sweet”
எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.
“To sneeze I tried hence but could not Me he tried to think but did not”
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
“Have I a place within his heart? Ah from mine he will never depart”
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
“Shame! My heart often he enters Banning me entry into his”
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.
“Beyond the thought of life with him What else of life can I presume?”
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.
“What will happen if I forget When his memory burns my heart?”
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
“I bring him to ceaseless memory He chides not; and thus honours me”
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
“Dear life ebbs away by thought Of him who said we are one heart”
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
“Hail moon! Set not so that I find Him who left me but not my mind”
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
“How shall I feast this dream-vision That brings the beloved's love-mission?”
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
“I beg these fish-like dark eyes sleep To tell my lover how life I keep”
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
“In wakeful hours who sees me not I meet in dreams and linger yet”
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
“In dreams I enjoy his love-bliss Who in wakeful hours I miss”
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
“Dream-sight of him delights at once Awake-What of seeing him -hence”
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
“If wakeful hours come to nought My lov'r in dreams would nev'r depart”
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
“Awake he throws my overtures Adream, ah cruel! he tortures!”
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
“Asleep he embraces me fast; Awake he enters quick my heart”
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
“In dreams who don't discern lovers Rue their missing in wakeful hours”
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
“The townsmen say he left me thus In dreams failing to see him close”
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
“Bless you! you are not eventide But killing dart to wedded bride!”
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
“Hail sad eventide dim and grim Has your mate like mine, cruel whim!”
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
“Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain”
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.
“Lover away, comes eventide Like slayer to field of homicide”
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
“What good have I done to morning And what evil to this evening?”
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?
“Evening pangs I have not known When my lord nev'r left me alone”
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
“Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay”
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
“A deadly arm, this shepherd's flute Hails flaming eve and slays my heart”
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
“Deluding eve if it prolongs The whole town will suffer love-pangs”
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
“Thinking of him whose quest is wealth My life outlives the twilight stealth”
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
“To lift from want he left me afar His thought makes my eyes blush the flower”
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
“My pale tearful eyes betray The hardness of my husband, away”
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
“These arms that swelled on nuptial day Now shrunk proclaim \"He is away\"”
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
“Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave”
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
“Bereft of bracelets and old beauty Arms tell the cruel's cruelty”
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
“Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul”
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
“Go and tell the cruel, O mind Bruit ov'r my arms and glory find”
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
“The front of this fair one O paled As my clasping arms loosed their hold”
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
“Cool breeze crept between our embrace Her large rain-cloud-eyes paled at once”
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
“Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair”
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
“Think of, O heart, some remedy To cure this chronic malady”
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
“Bless O mind! you pine in vain For me he has no love serene”
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
“O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity”
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
“Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out”
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
“He spurns our love and yet, O mind, Can we desert him as unkind?”
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
“Wrath is false, O heart, face-to face Sans huff, you rush to his sweet embrace”
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
“Off with love O mind, or shame I cannot endure both of them”
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.
“Without pity he would depart! You sigh and seek his favour, poor heart!”
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
“The lover lives in Self you know; Whom you think, mind to whom you go?”
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
“Without a thought he deserted us To think of him will make us worse”
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
“Passion's axe shall break the door Of reserve bolted with my honour”
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
“The thing called lust is a heartless power It sways my mind at midnight hour”
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
“How to hide this lust which shows Itself while I sneeze unawares!”
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
“I was proud of my sex-reserve Lo lust betrays what I preserve”
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
“Dignity seeks not a deserter But Love-sick is its innovator”
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
“O Grief, my deserter you seek Of your caprice what shall I speak!”
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
“When lover's love does what it desires We forget all shame unawares”
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
“The cheater of many wily arts His tempting words break through women's hearts”
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
“In huff I went and felt at ease Heat to heart in sweet embrace”
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
“To feign dislike is it not rare For mates who melt like fat in fire?”
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
“My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left”
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
“Beauty pales and my bracelets slide; Why not forget him now, bright maid?”
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
“Will as guide he went to win Yet I live-to see him again”
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
“My heart in rapture heaves to see His retun with love to embrace me”
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
“Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders files”
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
“Let my spouse return just a day Joy-drink shall drive my pain away”
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
“If my eye-like lord returneth Shall I sulk or clasp or do both?”
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.
“May the king fight and win and give And with my wife I will feast this eve!”
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
“One day seems as seven to those Who yearn return of distant spouse”
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
“When her heart is broken, what is The good of meeting and love-embrace?”
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
“You hide; but your painted eyes Restraint off, report your surmise”
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
“With seemly grace and stem-like arms The simple she has ample charms”
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
“Something shines through her jewelled charm Like thread shining through wreathed gem”
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
“Like scent in bud secrets conceal In the bosom of her half smile”
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
“The close-bangled belle's hidden thought Has a cure for my troubled heart She to Her Maid”
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
“His over-kind close embrace sooths; But makes me feel, loveless, he parts”
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
“Quick, my bracelets read before The mind of my lord of cool shore”
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
“My lover parted but yesterday; With sallowness it is seventh day The Maid Tells Him”
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
“She views her armlets, her tender arms And then her feet; these are her norms”
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
“To express love-pangs by eyes and pray Is womanhood's womanly way”
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
“Rapture at thought and joy when seen Belong to love and not to wine”
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
“When passion grows palmyra-tall Sulking is wrong though millet-small”
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
“Though slighting me he acts his will My restless eyes would see him still”
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
“Huff I would, maid, but I forget; And leap to embrace him direct”
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.
“When close I see not lord's blemish Like eyes that see not painter's brush”
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
“When he's with me I see not fault And nought but fault when he is not”
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
“To leap in stream which carries off When lord is close to feign a huff”
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
“Like wine to addicts that does disgrace Your breast, O thief, is for my embrace!”
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
“Flower-soft is love; a few alone Know its delicacy so fine”
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
“She feigned dislike awhile but flew Faster for embrace than I do”
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
“You see, his heart is his alone; Why not my heart be all my own?”
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
“O heart, you see how he slights me Yet you clasp him as if friendly”
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
“You follow him at will Is it \"The fallen have no friends\" my heart?”
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
“You won't sulk first and then submit Who will then consult you, my heart?”
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
“Frets to gain and fears loss in gain O my heart suffers ceaseless pain”
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
“My itching mind eats me anon As I muse on him all alone”
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
“I forget shame but not his thought In mean foolish mind I'm caught”
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
“My heart living in love of him Hails his glory ignoring blame”
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
“Who support a man in grief If lover's heart denies relief?”
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
“Why wonder if strangers disown When one's own heart is not his own?”
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
“Feign sulk; embrace him not so that We can see his distress a bit”
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
“Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband”
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
“To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved”
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
“To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself”
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
“Pouting of flower-eyed has To pure good mates a lovely grace”
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
“Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits”
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
“\"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt”
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.
“What's the good of grieving lament When concious lover is not present?”
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
“Water delights in a shady grove And sulking in souls of psychic love”
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
“My heart athirst would still unite With her who me in sulking left!”
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
“I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed”
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
“He sneezed while we went on sulking Expecting me to say \"live long\"”
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
“\"For which lady?\" she widely cries While I adorn myself with flowers”
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
“\"I love you more than all\" I said \"Than whom, than whom?\" she sulked and chid”
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
“\"In this life we won't part\" I told Her eyes at once with tears were filled”
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
“I said I thought of you She left Her embrace crying \"Oft you forget\"”
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
“I sneezed; she blessed; then changed and wept \"You sneezed now at which lady's thought?\"”
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
“I repressed sneeze; she wept crying \"Your thoughts from me you are hiding\"”
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
“I try to coax her and she remarks \"Your coaxing others thus this marks\"”
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
“I think and gaze at her; she chides: \"On whom your thought just now abides?\"”
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
“He is flawless; but I do pout So that his loving ways show out”
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளக்கு மாறு.
“Fading first, love blooms and outlives The petty pricks that pouting gives”
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
“Is there a heaven like sulk beneath Of hearts that join like water and earth?”
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
“In long pout after embrace sweet A weapon is up to break my heart”
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
“Though free form faults, one feels the charms Of feigned release from lover's arms”
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
“Sweeter than meal is digestion And sulk in love than union”
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
“The yielder wins in lover's pout Reunited joy brings it out”
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
“Shall not our pouting again give The dew-browed joy of joint love?”
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
“Sulk on O belle of shining jewels! Prolong O night! our delight swells!”
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
“Bouderie is lovers' delight Its delight grows when they unite”
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
Explore the complete Thirukkural
Search all 1,330 Kurals by number, Tamil, transliteration, English wording, chapter, or topic.