❤️ Explore by topic

Thirukkural on Love & Relationships

அன்பும் காதலும்

Love as a virtue and the intimate emotions of attraction, union, longing, separation, and reconciliation. Explore 260 relevant Kurals in Tamil and English, organized from the authentic Thirukkural chapter structure.

260 Kurals

Kurals connected to this topic

Open any Kural for translations, commentary, pronunciation, collections, and study tools.

What bolt can bar true love in fact The tricking tears reveal the heart

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

Open full study view
To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Open full study view
Love yields aspiration and thence Friendship springs up in excellence

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

Open full study view
The crowning joy of home life flows From peaceful psychic love always

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

Open full study view
Life bereft of love is gloom Can sapless tree in desert bloom?

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

Open full study view
Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

Open full study view
The seat of life is love alone; Or beings are but skin and bone!

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

Open full study view
Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

Open full study view
The counter glances of this belle Are armied dart of the Love-Angel

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

Open full study view
Not known before -I spy Demise In woman's guise with battling eyes

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

Open full study view
This artless dame has darting eyes That drink the life of men who gaze

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

Open full study view
To the drunk alone is wine delight Nothing delights like love at sight

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Open full study view
Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

Open full study view
Pangs of passion find no recourse Except riding *`palmyra horse' * Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs The parents of the lovers first reproach them and then consent to their marriage

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

Open full study view
Many survive pangs of parting Not I this sore so distressing

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

Open full study view
It swells out like baled out spring How to bear this pain so writhing?

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

Open full study view
I can't conceal this nor complain For shame to him who caused this pain

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

Open full study view
In life -poles of this wearied frame Are poised the weights of lust and shame

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

Open full study view
My lust is a sea; I do not see A raft to go across safely

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

Open full study view
What wilt they prove when they are foes Who in friendship bring me woes!

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

Open full study view
The pleasure in love is oceanful But its pangs are more painful

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

Open full study view
Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

Open full study view
Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

Open full study view
Crueller than that cruel he Are midnight hours gliding slowly

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

Open full study view
Like heart, if my sight reaches him It won't in floods of tears swim!

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

Open full study view
My lover's parting, I allowed Whom to complain my hue pallid?

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

Open full study view
Claiming it is begot through him Pallor creeps and rides over my frame

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

Open full study view
He seized my beauty and modesty Leaving pangs and Pallor to me

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

Open full study view
He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

Open full study view
Just as darkness waits for light-off Pallor looks for lover's arms-off

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

Open full study view
From his embrace I turned a nonce This pallor swallowed me at once

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

Open full study view
On my pallor they cast a slur But none says \"lo he parted her\"

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

Open full study view
Let all my body become pale If he who took my leave fares well

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

Open full study view
Let people call me all pallid But my lover let them not deride

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

Open full study view
The lover-and-beloved's self-givings Are like rains to living beings

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள஧ க்கும் அளி.

Open full study view
Love is sweeter than wine; for vast Is its delight at very thought

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

Open full study view
Pains are off at the lover's thought In all aspects this love is sweet

எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

Open full study view
To sneeze I tried hence but could not Me he tried to think but did not

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

Open full study view
Have I a place within his heart? Ah from mine he will never depart

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

Open full study view
Shame! My heart often he enters Banning me entry into his

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Open full study view
Beyond the thought of life with him What else of life can I presume?

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

Open full study view
What will happen if I forget When his memory burns my heart?

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

Open full study view
I bring him to ceaseless memory He chides not; and thus honours me

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

Open full study view
Dear life ebbs away by thought Of him who said we are one heart

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

Open full study view
To lift from want he left me afar His thought makes my eyes blush the flower

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

Open full study view
These arms that swelled on nuptial day Now shrunk proclaim \"He is away\"

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

Open full study view
Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

Open full study view
Bereft of bracelets and old beauty Arms tell the cruel's cruelty

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

Open full study view
Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

Open full study view
Go and tell the cruel, O mind Bruit ov'r my arms and glory find

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

Open full study view
The front of this fair one O paled As my clasping arms loosed their hold

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

Open full study view
Cool breeze crept between our embrace Her large rain-cloud-eyes paled at once

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

Open full study view
Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

Open full study view
Think of, O heart, some remedy To cure this chronic malady

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

Open full study view
O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

Open full study view
Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

Open full study view
He spurns our love and yet, O mind, Can we desert him as unkind?

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

Open full study view
Wrath is false, O heart, face-to face Sans huff, you rush to his sweet embrace

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

Open full study view
Off with love O mind, or shame I cannot endure both of them

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

Open full study view
Without pity he would depart! You sigh and seek his favour, poor heart!

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

Open full study view
The lover lives in Self you know; Whom you think, mind to whom you go?

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

Open full study view
Without a thought he deserted us To think of him will make us worse

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

Open full study view
Passion's axe shall break the door Of reserve bolted with my honour

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

Open full study view
The thing called lust is a heartless power It sways my mind at midnight hour

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

Open full study view
How to hide this lust which shows Itself while I sneeze unawares!

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

Open full study view
I was proud of my sex-reserve Lo lust betrays what I preserve

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

Open full study view
Dignity seeks not a deserter But Love-sick is its innovator

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

Open full study view
In huff I went and felt at ease Heat to heart in sweet embrace

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

Open full study view
To feign dislike is it not rare For mates who melt like fat in fire?

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

Open full study view
My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

Open full study view
Beauty pales and my bracelets slide; Why not forget him now, bright maid?

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

Open full study view
Will as guide he went to win Yet I live-to see him again

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

Open full study view
My heart in rapture heaves to see His retun with love to embrace me

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

Open full study view
Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders files

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

Open full study view
Let my spouse return just a day Joy-drink shall drive my pain away

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

Open full study view
If my eye-like lord returneth Shall I sulk or clasp or do both?

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

Open full study view
May the king fight and win and give And with my wife I will feast this eve!

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

Open full study view
One day seems as seven to those Who yearn return of distant spouse

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

Open full study view
When her heart is broken, what is The good of meeting and love-embrace?

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

Open full study view
With seemly grace and stem-like arms The simple she has ample charms

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

Open full study view
The close-bangled belle's hidden thought Has a cure for my troubled heart She to Her Maid

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

Open full study view
Rapture at thought and joy when seen Belong to love and not to wine

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

Open full study view
When passion grows palmyra-tall Sulking is wrong though millet-small

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

Open full study view
Huff I would, maid, but I forget; And leap to embrace him direct

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

Open full study view
When close I see not lord's blemish Like eyes that see not painter's brush

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

Open full study view
To leap in stream which carries off When lord is close to feign a huff

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

Open full study view
Like wine to addicts that does disgrace Your breast, O thief, is for my embrace!

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

Open full study view
She feigned dislike awhile but flew Faster for embrace than I do

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

Open full study view
Feign sulk; embrace him not so that We can see his distress a bit

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

Open full study view
Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

Open full study view
To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

Open full study view
To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

Open full study view
Pouting of flower-eyed has To pure good mates a lovely grace

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

Open full study view
Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

Open full study view
\"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.

Open full study view
What's the good of grieving lament When concious lover is not present?

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

Open full study view
Water delights in a shady grove And sulking in souls of psychic love

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

Open full study view
My heart athirst would still unite With her who me in sulking left!

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

Open full study view
I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

Open full study view
He sneezed while we went on sulking Expecting me to say \"live long\"

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

Open full study view
\"For which lady?\" she widely cries While I adorn myself with flowers

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

Open full study view
\"I love you more than all\" I said \"Than whom, than whom?\" she sulked and chid

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

Open full study view
\"In this life we won't part\" I told Her eyes at once with tears were filled

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

Open full study view
I said I thought of you She left Her embrace crying \"Oft you forget\"

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

Open full study view
I sneezed; she blessed; then changed and wept \"You sneezed now at which lady's thought?\"

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

Open full study view
I repressed sneeze; she wept crying \"Your thoughts from me you are hiding\"

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

Open full study view
I try to coax her and she remarks \"Your coaxing others thus this marks\"

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

Open full study view
I think and gaze at her; she chides: \"On whom your thought just now abides?\"

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

Open full study view

Explore the complete Thirukkural

Search all 1,330 Kurals by number, Tamil, transliteration, English wording, chapter, or topic.

Back to Explorer