சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் நேரடி நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பல ஆண்டு காலத்துக்கு முந்தைய வங்கி வழக்கு ஒன்றை தூசு தட்டி எடுத்து, அதை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் மத்திய அரசின் அமலாக்கத் துறை தோற்றுப்போனது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மேற்கொண்டுள்ள முயற்சிதான் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனம் குறித்த நேற்றைய கடிதம்.
Click the link above to read the full article on the original website.


