சென்னை: நகராட்சி நிர்வாக துறையில் அரசு பணி வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணையை தொடங்குமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறுவனம் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
Click the link above to read the full article on the original website.


