பழங்குடியினக் குடியிருப்புக்களில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் நடவடிக்கையாக 2025 அக்டோபர் 6 அன்று வழங்கப்பட்ட புதிய வாகனங்களால் பழங்குடியின மாணவர்களின் படிப்பும் பள்ளி வருகையும் சேர்க்கையும் அதிகரித்துள்ளன.
இவ்வாறு வழங்கப்பட்ட 71 வாகனங்களில் உண்டி உறைவிடப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்துக்காக 26 வாகனங்களும், தொலை தூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவை கொண்டு செல்ல 20 நடமாடும் மருத்துவ அலகுகளும் (MMU), அவசரகால உதவிகளுக்காக 25 ஆம்புலன்ஸ்களும் அடங்கும். பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து விரிவாக்கம், கடைக்கோடி பழங்குடியின பயனாளிகளுக்கான சேவையைச் சீராக வழங்குகிறது.
Click the link above to read the full article on the original website.


