Rs. 17.50 lakh found on the road in Madurai handed over to the police: Appreciation for the woman doing household work

மதுரை: மதுரை​யில் சாக்கு மூட்​டை​யுடன் சாலை​யில் கிடந்த ரூ.17.50 லட்​சத்​தை, வீட்​டு​வேலை செய்​யும் பெண் ஒரு​வர் மீட்​டு, போலீஸில் ஒப்​படைத்​தார். அவரை போலீ​ஸார், பொது​மக்​கள் பாராட்​டினர். மதுரை சிம்​மக்​கல்​லைச் சேர்ந்​தவர் செல்​வ​மாலினி(46), வீட்​டு​வேலை பார்க்​கும் இவர் கோயில்​களில் உழவாரப் பணி​யிலும் ஈடு​பட்டு வரு​கிறார். நேற்று முன்​தினம் இரவு மதுரை மாட்​டுத்​தாவணி​யிலுள்ள ஜவுளிக்​கடைக்கு சென்​றிருந்ததனது சகோ​தரி மகன், மகளை அழைக்க சிம்​மக்​கல் பேருந்து நிறுத்​தத்​துக்​குச் சென்​றார்.

அவர்​களை அழைத்​துக்​கொண்டு புறப்​பட்​ட​போது வக்​கீல் புதுத்​தெரு சந்​திப்​பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்​ததைக் கண்​டார். இதனை ஓரமாக தள்​ளி​விட முயன்​ற​போது, மூட்​டை​யில் ரூ.500 பணக்​கட்டு இருப்​பது தெரிந்​தது. பின்​னர் அந்​தப் பண மூட்​டையை காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கச் செல்ல முயன்​ற​போது, ரோந்து பணி​யில் இருந்த போலீ​ஸார் எதிரே வந்​தனர். இதனால் அவர்களிடம் ஒப்​படைத்​து​விட்​டுச் சென்​று​விட்​டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

In the stray dogs case, the Chief Secretaries of Tamil Nadu and other states must appear on November 3: Supreme Court order.

Vijay may have avoided going to Karur due to the risk to his life: Nainar Nagendran’s opinion.