மதுரை: மதுரையில் சாக்கு மூட்டையுடன் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சத்தை, வீட்டுவேலை செய்யும் பெண் ஒருவர் மீட்டு, போலீஸில் ஒப்படைத்தார். அவரை போலீஸார், பொதுமக்கள் பாராட்டினர். மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்தவர் செல்வமாலினி(46), வீட்டுவேலை பார்க்கும் இவர் கோயில்களில் உழவாரப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு மதுரை மாட்டுத்தாவணியிலுள்ள ஜவுளிக்கடைக்கு சென்றிருந்ததனது சகோதரி மகன், மகளை அழைக்க சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார்.
அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டபோது வக்கீல் புதுத்தெரு சந்திப்பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததைக் கண்டார். இதனை ஓரமாக தள்ளிவிட முயன்றபோது, மூட்டையில் ரூ.500 பணக்கட்டு இருப்பது தெரிந்தது. பின்னர் அந்தப் பண மூட்டையை காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்ல முயன்றபோது, ரோந்து பணியில் இருந்த போலீஸார் எதிரே வந்தனர். இதனால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
Click the link above to read the full article on the original website.


