Vijay may have avoided going to Karur due to the risk to his life: Nainar Nagendran’s opinion.

சிவகங்கை: ‘கரூர் சென்​றால் உயிருக்கு ஆபத்து இருப்​ப​தால், விஜய் அங்கு செல்​வதை தவிர்த்​திருக்​கலாம்’ என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். விடு​தலைப் போராட்ட வீரர்​கள் மருது சகோ​தரர்​கள் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்​டம் காளை​யார்​கோ​விலில் அவர்​களது நினை​விடத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலை​மை​யில் மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா, மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம், மாவட்​டத் தலை​வர் பாண்​டித்​துரை,

முன்​னாள் மாவட்​டத் தலை​வர் மேப்​பல் சக்​தி, ஓபிசி அணி மாநிலச் செய​லா​ளர் நாகேஸ்​வரன் ஆகியோர் மரி​யாதை செலுத்​தினர். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: கரூரில் மக்​களுக்கே பாது​காப்பு இல்​லை. அங்கு சென்​றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்​ப​தாக அனை​வருக்​கும் சந்​தேகம் உள்​ளது. அதனால் கரூர் செல்​லாமல், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை சென்​னைக்கு வரவழைத்து ஆறு​தல் கூறி​யிருக்​கலாம்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Rs. 17.50 lakh found on the road in Madurai handed over to the police: Appreciation for the woman doing household work

BJP Overseas Tamil Division helped bring the body of the Ramanathapuram youth who died in Dubai to Tamil Nadu.