திருவள்ளூர்: சர்வதேச அளவில் தொடர்புகொண்ட போதைப்பொருள் நெட்வொர்க்கை கண்டறிந்து, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி, விற்பனை செய்த பலர் குறித்த தகவல் காவல் துறைக்கு கிடைத்தது. இந்நிலையில், கடந்த அக்.14-ம் தேதி, 50 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னீர் (வயது 28) மற்றும் ஜாவேத் (வயது 38) மீது குற்ற வழக்கு பதிவு செய்தது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் காவல் நிலையம்.
Click the link above to read the full article on the original website.


