கோவை: கோவையில் காரில் பெண் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் திருப்பம் ஏற்பட்டது. தம்பதி இடையே நடந்த தகராறை கடத்துவதாக அளித்த தகவலால் சர்ச்சை என போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் இருகூரை அடுத்த அத்தப்ப கவுண்டன்புதூர் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நேற்று (நவ.6) மாலை ஒரு கார் நின்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த காரில் பெண் ஒருவரை மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒருவர் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
Click the link above to read the full article on the original website.


