அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகர் பஜ்ரங்வாடியிலுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் அல்டாப் காத்ரி. இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். அண்மையில் வியாபாரம் மூலம் வந்த ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை பிளாஸ்டிக் பையில் சுற்றி தனது வீட்டில் வைத்துவிட்டு தொழுகை செய்து கொண்டிருந்தார்.
இதையறியாமல் அவரது வயதான அத்தை, பழைய பிளாஸ்டிக் பை வீட்டில் இருப்பதைப் பார்த்து அதை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது பை இல்லாததைக் கண்டு பதறிய அல்டாப், தனது அத்தையிடம் விவரம் கேட்டுள்ளார். அப்போது அவர் பையை குப்பைத் தொட்டியில் வீசிய கதையை கூறியுள்ளார். இந்நிலையில், தெருவில் குப்பையை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர்கள் குப்பையை லாரியில் போட்டு எடுத்துச் சென்றுவிட்டனர்.
Click the link above to read the full article on the original website.


