புதுடெல்லி: டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய மருத்துவர் உமர் நபியின் உடலை அடையாளம் காண்பதற்காக அவருடைய தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. உடல்கள் சிதைவடைந்திருப்பதால் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது ஹுண்டாய் ஐ-20 கார் என்றும் அதை ஓட்டி வந்தது காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்றும் தெரியவந்துள்ளது. முன்னதாக பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.


