கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர் கொலையான வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சித் தலைவராக இருந்தவர் சுபாஷ். இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருவரின் கணவரான தாமோதரன் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனினும், தேர்தல் பிரச்சினையால் அவர்களுக்குள் பகை அதிகமானது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


