சென்னை: எஸ்ஐஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந்திருந்தும் பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக அதை எதிர்க்க முடியாமல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன.
ரஷ்ய நவம்பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியகம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் 108-வது நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி சென்னையில் இருகட்சிகளின் மாநிலக் குழு அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “எஸ்ஐஆர் தொடக்க நிலை யிலேயே தோற்றுவிட்டது. அதில்குளறுபடிகள் உள்ளன. இதில்அதிமுகவின் நிலைப்பாடும் ஆபத்தானதாகவும், பரிதாபமாகவும் உள்ளது. அதிமுகவின் குரல் ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக மாறி வருகிறது” என்றார்.
Click the link above to read the full article on the original website.


