‘உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாத வனுக்குக்கூட எதிர்காலம் உண்டு' என்று கூறி மாணவர்கள் மனதில் வாழ்க்கை மீது நம்பிக்கை விதைத்தவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி, அறிவியல் வளர்ச்சி முதலானவையே நம்மையும் நாட்டையும் முன்னேற்றப் பாதை யில் இட்டுச் செல்லும் என்று இளையோருக்கு உணர்த்தும் வகையில் வாழ்ந்து காட்டியவர்.
அவரைப் போற்றும் விதமாக அவர் பிறந்த நாளான அக்டோபர் 15 உலக மாணவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கல்வி பெறுவதற்கான சம வாய்ப்பு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை முன்னிறுத்தவே ஐக்கிய நாடுகள் அவை கடந்த 2010ஆம் ஆண்டில் இந்நாளைத் தெரிவுசெய்தது.
Click the link above to read the full article on the original website.


