இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ) உள்நாட்டு ஏவூர்திகள் தயாரிப்பில் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது. வறுமையும் பஞ்சமும் மிகுந்த நாடாக இந்தியா அறியப்பட்டுக்கொண்டிருந்த நாள்களில் பி.எஸ்.எல்.வி. ஏவூர்தி வடிவமைப்பின் மூளையாக அவர் செயல்பட்டார். இந்தியாவின் முதல் உள்நாட்டுச் செயற்கைக்கோள் ஏவூர்தியைத் (எஸ்.எல்.வி. III) தயாரிக்கும் திட்டத்தின் இயக்குநராகக் கலாம் பொறுப்பு வகித்தார்.
இந்திய மண்ணில் இருந்தே நம் செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும் என்பது இஸ்ரோ விஞ்ஞானிகளின் நெடுநாள் கனவு. அதை நிறைவேற்றும் வகையில் 1979 ஆகஸ்ட் 10 அன்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள் ஏவப்படும் நொடிக்காகத் தன் குழுவினருடன் கலாம் காத்திருந்தார். கவுன்ட் டவுன் முடிந்து செயற்கைக்கோள் விண்ணில் சீறிப்பாய வேண்டிய கடைசி நொடியில், திட்டத்தை நிறுத்தும்படி கணினி ஆணையிட்டது. சில நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழும்.
Click the link above to read the full article on the original website.


