வேலூர்: வேலூர் மதச்சார்பின்மை கோட்டையாக இருக்கிறது. வேலூர் மக்கள் மதச்சார்பின்மையை பாதுகாப்பதுபோல் இந்தியா முழுவதும் இந்த ஒற்றுமை இருக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (அக்.4) காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 49 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், ரூ.17.91 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.11.80 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வரவேற்றார்.
Click the link above to read the full article on the original website.


