திருச்சி: தமிழகத்தில் கட்சிகளுக்குள் போட்டியில்லை, கருத்தியல்களுக்கு இடையேதான் போட்டி. இங்கு நடப்பது திராவிட கருத்தியலுக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையே நடக்கும் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது கோவையில் நடந்த ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் உள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்து விட்டு சிறைியலிருந்து வந்தவன் பெற்றத் தாயை கொலை செய்கிறான். அந்தக் குற்றவாளியின் நீதிமன்றம் விடுவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டதோ, இச்சமூகம் வாழ வாய்ப்பற்ற கொடூரமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.
Click the link above to read the full article on the original website.


