Thiruvachagam speaks of the love that completes the world!

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. அப்படிப்பட்ட திருவாசகத்தின் பாடல்களுக்கு சிம்பொனி வடிவில் இசையமைத்து உலகம் முழுவதும் அந்தப் பாடல்களில் வெளிப்படும் அன்பு அலையைப் பரப்பியவர் இளையராஜா. அவர் சிம்பொனி வடிவில் இசையமைத்த பாடல்களில் வெளிப்படும் இசை நுட்பங்களையும் நயங்களையும் 'அறிவுச் சமூகம்' நடத்தும் இசைப் பெருவெடிப்பு மெய்நிகர் நிகழ்வில் அண்மையில் பகிர்ந்துகொண்டார் பியானோ வாத்தியக் கலைஞரான ஆன்டனி செபாஸ்டியன்.

திருவாசகத்தின் பெருமை, அதை உலக மக்களுக்கு இசையின் துணைகொண்டு வழங்குவதற்கு இளையராஜா இசைத் தவமாகச் செலவழித்த நாட்களுக்கும், மாணிக்கவாசகரின் இறுதி நாட்களுக்கும் உள்ள தொடர்பு, அன்பைப் போதிப்பதில் திருவாசகத்துக்கும் பைபிளுக்கும் இருக்கும் ஒற்றுமை, சிம்பொனி இசை வடிவத்தின் மகத்துவம், புடாபெஸ்ட் சிம்பொனி இசைக் கலைஞர்களிடம் இருந்து தனக்கு தேவைப்படும் இசையை இளையராஜா எப்படிப் பெற்றார் என்பதற்கான விளக்கங்களை விரிவாகவும் எல்லோருக்கும் புரியும் வகையிலும் பாடியும், சில இசைக் குறிப்புகளை கீபோர்டில் வாசித்தும் ரசிகர்களுக்கு பக்தி இசை மழையைப் பொழிந்தார் ஆன்டனி.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The sweetness of Tamil music should resonate internationally: BAFTA award-winning composer Karthikeya Murthy

Helping the underprivileged through an online music program