“Decorum does one dignity More than life guard its purity”
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
⚖️ Explore by topic
வாய்மை
Truthfulness, integrity, moral conduct, and the value of words that do not deceive or harm. Explore 20 relevant Kurals in Tamil and English, organized from the authentic Thirukkural chapter structure.
Open any Kural for translations, commentary, pronunciation, collections, and study tools.
“Decorum does one dignity More than life guard its purity”
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
“Virtues of conduct all excel; The soul aid should be guarded well”
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
“Good conduct shows good family Low manners mark anomaly”
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
“Readers recall forgotten lore, But conduct lost returns no more”
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
“The envious prosper but ill The ill-behaved sinks lower still”
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
“The firm from virtue falter not They know the ills of evil thought”
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
“Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean”
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
“Good conduct sows seeds of blessings Bad conduct endless evil brings”
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
“Foul words will never fall from lips Of righteous men even by slips”
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
“Though read much they are ignorant Whose life is not world-accordant”
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
“If \"What is truth\"? the question be, It is to speak out evil-free”
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
“E'en falsehood may for truth suffice, When good it brings removing vice”
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
“Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh”
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
“He lives in loving hearts of all Who serves the Truth serene in soul”
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
“To speak the truth from heart sincere Is more than giving and living austere”
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
“Not to lie brings all the praise All virtues from Truth arise”
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
“Lie not lie not Naught else you need All virtues are in Truth indeed”
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
“Water makes you pure outward Truth renders you pure inward”
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
“All lights are not lights for the wise; Truth light is light bright like Sun-light”
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
“Of all the things we here have seen Nothing surpasses Truth serene!”
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
Explore the complete Thirukkural
Search all 1,330 Kurals by number, Tamil, transliteration, English wording, chapter, or topic.