“Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades”
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
🕊️ Explore by topic
வெகுளாமை
The cost of anger and the strength found in restraint, patience, and emotional discipline. Explore 30 relevant Kurals in Tamil and English, organized from the authentic Thirukkural chapter structure.
Open any Kural for translations, commentary, pronunciation, collections, and study tools.
“Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades”
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
“No gains with self-control measure Guard with care this great treasure”
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
“Knowing wisdom who lives controlled Name and fame seek him untold”
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
“Firmly fixed in self serene The sage looks grander than mountain”
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
“Humility is good for all To the rich it adds a wealth special”
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
“Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold”
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
“Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes”
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
“Even a single evil word Will turn all good results to bad”
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
“The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore”
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
“Virtue seeks and peeps to see Self-controlled savant anger free”
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
“As earth bears up with diggers too To bear revilers is prime virtue”
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
“Forgive insults is a good habit Better it is to forget it”
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
“Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength”
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
“Practice of patient quality Retains intact itegrity”
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
“Vengeance is not in esteem held Patience is praised as hidden gold”
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
“Revenge accords but one day's joy Patience carries its praise for aye”
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
“Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain”
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
“By noble forbearance vanquish The proud that have caused you anguish”
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
“More than ascetics they are pure Who bitter tongues meekly endure”
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
“Who fast are great to do penance Greater are they who bear offence”
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
“Anger against the weak is wrong It is futile against the strong”
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
“Vain is wrath against men of force Against the meek it is still worse”
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
“Off with wrath with any one It is the source of sin and pain”
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
“Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?”
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
“Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay”
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
“Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge”
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
“The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground”
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
“Save thy soul from burning ire Though tortured like the touch of fire”
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
“Wishes he gains as he wishes If man refrains from rage vicious!”
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
“Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled”
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
Explore the complete Thirukkural
Search all 1,330 Kurals by number, Tamil, transliteration, English wording, chapter, or topic.