திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள், தந்தம், பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் பொருட்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், இந்த பொக்கிஷங்களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், முறைகேடுகளுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என குருவாயூர் தேவசம் வாரியத்தின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
குருவாயூர் தேவசம் வாரியத்தின் புன்னத்தூர் கோட்டா சரணாலயத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டு அறிக்கையில் 522.86 கிலோ தந்தம் மற்றும் தந்தப் பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்படி தந்தம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு ஒப்படைக்கப்படவில்லை என வனத்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.
Click the link above to read the full article on the original website.


