கவனி
என் குரல்
எவ்வளவு பலவீனமாக ஒலித்தாலும்
நாம் பேசியாக வேண்டும்!
விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் தன்னுடைய எழுத்துக்களையே ஆயுதமாக்கிய கவிஞர் இன்குலாப்பின் வரிகள் இவை. சமூகத்தில் திருநங்கை, திருநம்பி உள்பட பால்புதுமையர்களின் நிலையும் விளிம்பு நிலையில்தான் இருக்கிறது. அவர்களுக்கான கருத்துகளை மதுரை அணியம் அறக்கட்டளை `பால்மணம்' என்னும் மின்னிதழ் வடிவில் ஏற்படுத்தித் தந்தது. இதற்குக் காரணமான ஜெகன், அதோடு நிறுத்திக் கொள்ளாமல் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளை தொகுத்து `பால்மணம்' என்னும் பெயரிலேயே நூலாகவும் கடந்த ஆண்டு வெளியிட்டனர்.
தற்போது இப்படி மின்னிதழில் வெளியான கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு அண்மையில் சென்னை, கூகை திரைப்பட இயக்கம் நூலகத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்விலிருந்து சில துளிகள்:
Click the link above to read the full article on the original website.


