ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்றும் 118-வது ஜெயந்தி விழா 3 நாட்களுக்கு நடைபெகிறது. நேற்று காலை ஆன்மிக விழா தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில், உலக நன்மைக்காக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, தேவர் சிலைக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு, லட்சார்ச்சனை, மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதில், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று (அக். 29) இரண்டாம் கால யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை விழாவின் தொடர்ச்சி மற்றும் அரசியல் விழா நடைபெறுகிறது.
Click the link above to read the full article on the original website.


