ஒரு யதார்த்தமான கதையை விறுவிறுப்புடன் சிறார்களுக்காக இந்த நாவலை ஓவியர் வெங்கி என்கிற வெங்கடேசன் எழுதியிருக்கிறார். அளவுக்கு அதிகமாக, வரிகளை விதித்து மக்களைத் துன்பப்படுத்தும் கொடுமைக்கார மந்திரியிடமிருந்து நாட்டையும் மக்களையும் காக்க ஒரு இளைஞன் போராடுகிறான். ஒரு கழுகும் அவனுக்குத் துணை புரிகிறது. ஆள்மாறாட்டம், சாகசம் எனச் சுவாரசியமான பலதும் இந்த நாவலில் இருக்கின்றன.
‘சந்தமாமா’ சங்கர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்படும் பத்மஸ்ரீ கே.சி.சிவசங்கரனிடம் ஓவியக்கலையின் அழகியலை பயின்றவர் வெங்கடேசன். அண்மைக் காலமாகத் தமிழ் வெகுஜன இதழ்கள் சித்திரக்கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்கிற விமர்சனத்தைக் களையும் வகையில், அழகிய ஓவியங்களுடன் அபாரமாக புனையப்பட்ட சிறார் நாவல்தான், ‘கழுகுக் கோட்டை’.
Click the link above to read the full article on the original website.


