திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பாம்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திக்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கிராமத்தில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக திருப்பத்தூர் நகர் பகுதிக்கு வர வேண்டுமென்றால் அங்குள்ள பாம்பாற்றை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பழைய அத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நகர் பகுதிக்கு வந்து செல்ல கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
Click the link above to read the full article on the original website.


