எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்து நடை, உளவியலைக் கையாளும் விதம், கருத்தாழம், சமுதாயச் சிந்தனைகள் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை. அவரது சிறுகதைகள், நாவல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். யாருக்காக அழுதான், பாரிசுக்குப் போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சினிமாவுக்குப் போன சித்தாளு, பிரம்மோபதேசம், இறந்த காலங்கள், அக்னிப் பிரவேசம் போன்றவை அவற்றில் சில.
ஜெயகாந்தன் சிறுகதைகளில் இடம்பெறும் சாதாரண கதாபாத்திரங்கள்கூட அறிவு ஜீவிகளாகச் சித்தரிக்கப்படுவர். எடுத்துக் காட்டாக ‘இலக்கணம் மீறிய கவிதை’ சிறுகதையில் பாலியல் தொழிலாளி ஒருவர் தன் மீது அனுதாபப்படும் இளைஞனைப் பார்த்து, “நான் எப்படி இருக்கேனோ அப்படியே என்னைப் பார்க்க உங்களுக்குத் தெரியாதா? இது ஒரு தொழில்.
Click the link above to read the full article on the original website.


