சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயிலும், சென்னை – தாம்பரம் இடையே முன்பதி வில்லாத மெமு விரைவு ரயிலில் இயக்கப்படுகிறது. இதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06013) புறப்பட்டு, நாளை காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 20-ம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் (06014) புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த ரயிலில் ஒரு ஏசி சேர் கார் பெட்டியும், 11 சேர் கார் பெட்டிகளும், 4 பொது பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது.
Click the link above to read the full article on the original website.


