South Africa falters in the Lahore Test match.

லாகூர்: பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 93, கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் சேர்த்தனர்.

முகமது ரிஸ்வான் 62, சல்மான் ஆகா 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 110.4 ஓவர்களில் 378 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் 75, சல்மான் ஆகா 93 ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்களை வீழ்த்தினார். பிரனலன் சுப்ராயன் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Joshna is the champion at the Japan Open!

Ghana team qualifies for the FIFA World Cup!