SIR is not idiyappam.. it is idli! – Tamilisai’s tasty explanation

சென்னை எம்ஜிஆர் நகர் சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் மக்கள் நல திட்ட விளக்க சிறப்பு முகாம் கே.கே.நகரில் நேற்று நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) நேர்மையாக நடைபெறுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எஸ்ஐஆர் இடியாப்பச் சிக்கல் நிறைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

எஸ்ஐஆர் இடியாப்பம் போல சிக்கலானது அல்ல. எஸ்ஐஆர் என்பது இட்லியைப் போன்றது. அப்படியே பிய்த்து சாப்பிடலாம். உடலுக்குச் சத்தான இட்லியைப் போல் எஸ்ஐஆர் ஜனநாயகத்துக்கு சத்தானது. அவசர நிலை பிரகடனத்தின் போது, மு.க.ஸ்டாலினை சிறைக்கு அனுப்பிய காங்கிரஸ் கட்சியை பார்த்து, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி என திமுகவினர் சொல்கிறார்கள். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது, ராகுல்காந்தி எங்கே போனார் என்று தெரியவில்லை.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Neyyar Dam case: Supreme Court orders Kerala government to respond

AIADMK case filed to put a “check” on DMK: Palaniswami explains