Senthamangalam DMK MLA Ponnusamy has passed away.

நாமக்கல்: சேந்​தமங்​கலம் சட்​டப்​பேர​வைத் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி (74) உடல்​நலக்​ குறை​வால் நேற்று காலமானார். நாமக்​கல் மாவட்​டம் சேந்​தமங்​கலம் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி, உடல்​நலக்​குறைவு காரண​மாக நேற்று காலை நாமக்​கல் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். மாரடைப்​பால் அவர் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. அவருக்கு மனைவி ஜெயமணி, மகன் மாதேஸ், மகள் பூமலர் ஆகியோர் உள்ளனர்.

கொல்​லிமலை இலக்​கி​ராய்ப்​பட்​டியைச் சேர்ந்த பொன்​னு​சாமி, 9-ம் வகுப்பு வரை படித்​துள்​ளார். 2006 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சேந்​தமங்​கலம் தொகு​தி​யில் வென்ற பொன்​னு​சாமி, 2011, 2016-ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​வாய்ப்பை இழந்​தார். மீண்​டும் 2021 தேர்​தலில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Karaikal | Life imprisonment for the mother of a school student in the murder of a fellow student

In Ramanathapuram, thousands of acres of paddy and chili crops were submerged in water due to the rain.