காரைக்கால்: படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக தனது மகளுடன் பயின்ற சக மாணவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
காரைக்கால் நேரு நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன்(48)- மாலதி(40). இவர்களது மகன் பாலமணிகண்டன்(13). நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பாலமணிகண்டன் முதன்மையாக இருந்துள்ளார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


