சென்னை: தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 16 உடன் முடிவடையும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் நவம்பர் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சமூகநீதியை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆணையம், சமூகநீதியை படுகொலை செய்யும் அரசின் சதிகளுக்கு துணை போனதையும், கொடுக்கப்பட்ட கடமைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததும் அதன் தோல்வியை மட்டுமின்றி துரோகத்தன்மையையும் காட்டுகிறது. இத்தகைய தன்மை கொண்ட சமூகநீதியின் எதிரிகளுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள ஆணையத்தில் கண்டிப்பாக இடமளிக்கக்கூடாது.
Click the link above to read the full article on the original website.


