புதுடெல்லி: “தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 அன்பளிப்பு வழங்கப்படும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலை துறை தூய்மை பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருந்தால் அதுபற்றி தகவல் அளிக்கலாம். இதற்கு பரிசாக அவர்களுடைய வாகனங்களின் ‘பாஸ்டேக்’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்படும். இது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கழிவறைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பரிசு திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செல்லும்.
Click the link above to read the full article on the original website.


