முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியது, மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கக் கோரியது போன்ற முக்குலத்தோருக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் தென் மாவட்டத்தில் இழந்த வாக்கு வங்கியை மீட்கவும், பசும்பொன்னில் ஜெயலலிதா காலத்து முக்கியத்துவத்தை பெறவும் அதிமுக காய் நகர்த்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30-ல் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவும் 63-வது குருபூஜையும் நடக்கிறது. இந்த விழாவுக்கும், அதிமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 2014-ல் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தேவரின் தங்கக் கவசத்தை வழங்கினார்.
Click the link above to read the full article on the original website.


