கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ-வான அதிமுகவின் தளவாய் சுந்தரம் மீண்டும் தொகுதியைத் தக்கவைக்கும் திட்டத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். இவரை எதிர்த்து திமுக இம்முறை முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை நிறுத்தலாம் என்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் கவனிக்கப்படும் நபராக மாறி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய ஜெனிபர்.
மரிய ஜெனிபர் – தீபக் சாலமன் தம்பதி இதற்கு முன்பு துபாயில் பணி செய்தவர்கள். அங்கிருந்தபடியே நாதக அயலக பிரிவான ‘செந்தமிழர் பாசறை’ வாயிலாக வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஆதரவு திரட்டியவர்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாய் வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு சொந்த ஊர் திரும்பிய இவர்கள், தற்போது குமரி மாவட்டத்தில் நாதகவுக்காக தீவிர களப்பணியில் இருக்கிறார்கள்.
Click the link above to read the full article on the original website.


