கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று டீன் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 2013ம் ஆண்டு முதல், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதன் ‘காக்லியர்’ பொருத்துதல் திட்டத்தின் மூலம் இளம் குழந்தைகளுக்கு கேட்கும் திறனையும் பேச்சையும் மீட்டெடுப்பதில் முன்னணியில் உள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. தோராயமாக 7 லட்சம் மதிப்புள்ள ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.


