கோவை: கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இளம்பெண் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் ஹசன். இவரது மகன் ஆரிப் (20). இவர், கோவை கடைவீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் பஷீர் மகன் ஷேக் உசேன் (20) ஓட்டுநர். இவர்கள் இருவரும் நண்பர்கள். ஆரிப் வேலை செய்து வரும் ஜவுளிக்கடையில், செல்வபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகள் சத்தியபிரியா (17) என்பவரும் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், காந்திபுரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


