முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் செய்த தவறுக்கான பலனை தற்போது அனுபவித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக நிர்வாக குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் அர்ஜூனன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிஹாரில் நடந்த வாக்காளர் திருத்தப் பட்டியலில் நடந்த முறைகேடுகளை தமிழகத்திலும் செயற்படுத்த முனைந்துள்ள தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை அனைத்துக் கட்சிகளும் முறியடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பரிந்துரை செய்துள்ள விதிகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Click the link above to read the full article on the original website.


