ஷுப்மன் கில் கேப்டன்சி நல்ல தொடக்கம் கண்டுள்ளதாக கம்பீர் பாராட்டியுள்ளார். இங்கிலாந்தில் 2-2 என்று தொடரைச் சமன் செய்தது, இப்போது மே.இ.தீவுகளை 2-0 என்று வீழ்த்தியது ஆகியவை நல்ல தொடக்கம் என்கிறார் கம்பீர். மேலும் ஷுப்மன் கில்லிடம் கேப்டன்சியை கொடுத்ததன் மூலம் அவருக்குச் சாதகமாக யாரும் செயல்படவில்லை என்றார்.
உண்மையில் பயிற்சியாளராக இருப்பதால் இங்கிலாந்தில் 2-2 என்று டிரா செய்ததை அவர் விதந்தோதுகிறார், இதே வேறு பயிற்சியாளராக இருந்து இதே 2-2 டிரா செய்திருந்தால் தொடரை வென்றிருக்க வேண்டும் என்பார். நாமும் இதைத்தான் இப்போதும் சொல்கிறோம். பும்ரா பணிச்சுமை என்று தேவையற்ற பிரச்சனையைக் கிளப்பி இங்கு கொண்டு வந்து மண் பிட்சிலும், துபாய் வெயிலில் காயவிட்டதும் என்ன பணிச்சுமைக் குறைப்பு? ஒருவேளை பும்ராவை 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடச்செய்திருந்தால் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை நீண்ட காலம் கழித்துக் கைப்பற்றியிருக்கலாமே?! ஏன் கம்பீர் இப்படி யோசிக்கவில்லை. மேலும் இவரது செலக்‌ஷன் தவறுகளினால்தான் இங்கிலாந்தில் தொடரை வெல்ல முடியாமல் போயுள்ளது என்ற விமர்சனங்களுக்குக் கம்பீரின் பதில் என்ன?
Click the link above to read the full article on the original website.


