பாட்னா: “பிஹார் மாற்றத்துக்குத் தயாராக உள்ளது. எங்கள் ஆட்சியில் பிஹார் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாறும். எந்த ஒரு பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கூறினார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “கடந்த 20 ஆண்டுகளில் பிஹார் எந்த வெற்றியையும் காணவில்லை. நவம்பர் 14-க்குப் பிறகு, பிஹாரின் வெற்றிப் பட்டியல் தொடங்கும். எங்கள் ஆட்சியில் பிஹார் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாறும். உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கல்விக்கான வசதிகள், மருத்துவம் மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் பிஹாரில் இருக்கும்.
Click the link above to read the full article on the original website.


