மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,374 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏற்கெனவே 6 முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இந்நிலையில், காவிரியில் நீர்வரத்து குறைந்தது, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,026 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,374 கனஅடியாக அதிகரித்தது.
Click the link above to read the full article on the original website.


