நாகப்பட்டினம்: தான் டெல்டாகாரன் என்று பெருமையாக கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா பகுதி மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அனைவரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டும் தீபாளியை சிறப்பாகக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். அரசு கொள்முதல் கிடங்குகள் போதிய அளவில் இல்லாததாலும், வழக்கத்தைவிட 3-ல் ஒரு பங்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாலும் விளைந்த நெல் மணிகள் மழையில் நனைந்து, முளைத்து வருகின்றன. இதனால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது.
Click the link above to read the full article on the original website.


