சென்னை: தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்காமல் தமிழக மக்களின் பாதுகாப்போடு முதல்வர் ஸ்டாலின் விளையாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், தங்களுக்கு ஏற்ற நபரை, தேர்தல் நேரத்தில் தங்களுக்கு உதவியாக இருக்கும் அதிகாரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வெறும் தேர்தல் ஆதாயத்துக்காக, சட்டம்- ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறைக்கு முழுநேர டிஜிபி-யை நியமிக்காமல் இழுத்தடித்து, தமிழக மக்களின் பாதுகாப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
Click the link above to read the full article on the original website.


