புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 6.6 சதவீதம் வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா வரிகளை உயர்த்தியது. சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தது. இதனால் உலகளவில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் சூழலில், உலக பொருளாதார முன்னோட்டம் குறித்த அறிக்கையை, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 2025-26-ம் நிதியாண்டில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும். இதன் பொருளாதாரம் 6.6 என்ற வீதத்தில் வளர்ந்து வருகிறது. முதல் காலாண்டில் பொருளாதாரத்தில் சிறப்பான செயல்பாடு காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரிவிதிப்பின் பாதிப்புகளை ஈடுசெய்துள்ளது.
Click the link above to read the full article on the original website.


