பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் மருத்துவர் மகேந்திர ரெட்டி (34). இவருக்கும் பெல்லாரியை சேர்ந்த மருத்துவரான‌ கிருத்திகா ரெட்டிக்கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திருமணமான‌து. கிருத்திகா ரெட்டிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸார் கிருத்திகாவின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி,உறுப்புகள் சிலவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். அதில் பிரபோல் எனப்படும் அனஸ்தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மகேந்திர ரெட்டி மீது மாரத்தஹள்ளி போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து, கடந்த அக்டோபர் 14-ம் தேதி அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
Click the link above to read the full article on the original website.


