ஒரு த்ரில்லர் திரைப்படத்தைப் பார்க்கும் பரபரப்புடனும் அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்புடனும் வாசகனை ஆழமாகவும் அதிர்ச்சியுடனும் இழுத்துச் செல்கிறது, இலங்கையைச் சேர்ந்த டிலுக்‌ஸன் மோகன் எழதியிருக்கும் ‘படுபட்சி’ நாவல். புனைவும் தன் வரலாறும் கொண்ட ‘ஆட்டோ பிக் ஷன்’ வகை நாவலான இது, இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவையும் அக்கனவு சுக்குநூறாக உடைந்த வலியையும் பேசுகிறது. இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில்
இன்று நடக்க இருக்கும் நிலையில், இந்நாவலாசிரியர் டிலுக்ஸன் மோகனிடம் உரையாடினோம்.
‘படுபட்சி’யை எங்கிருந்து தொடங்கினீர்கள்? – எங்கே என் வாழ்க்கையும் கனவும் நிராகரிக்கப்பட்டதோ, எங்கே என் வலி என்னைத் துரத்திக் கொண்டே இருந்ததோ, என் ஆதங்கம் எப்போது கேள்விக் கேட்கத் தொடங்கியதோ அங்கிருந்துதான் ‘படுபட்சி’ தொடங்கியது. தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை. எனக்கு என்ன நடந்தது என்பதன் மூலம் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்லும் முயற்சிதான் இது.
Click the link above to read the full article on the original website.


