கும்பகோணம்: வரும் டிச.20-ம் தேதி டிஆர்பி மூலம் 2700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் பணி நியமிப்பதற்கான உத்தரவு வழங்கப்படவுள்ளன என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து உரையாற்றினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில், 17 துறைகளில் படித்து தேர்ச்சி பெற்ற 2787 இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கூறியதாவது: கும்பகோணம் அரசினர் கல்லூரி தஞ்சாவூர் மாவட்டத்திலேயே பழமையான கல்லூரி. 171 ஆண்டுகள் பழமையான கல்லூரி மட்டுமில்லாமல், இங்கு படித்த பலர் புகழ் பெற்றவர்களாகியுள்ளார்கள்.
Click the link above to read the full article on the original website.


