சிறார் கதைகளிலிருந்து மாறுபட்டவை ஜென் கதைகள். வழக்கமான கதைகளில் பெரும்பாலும் நீதியைக் குழந்தைகள் தேடவேண்டியிருக்கும். சில சமயங்களில் கதையைச் சொல்பவர்களே ‘இதுதான் நீதி’ என்று சொல்லவேண்டியிருக்கும். நீதியே கதையாக மலர்வதுதான் ஜென். எழுத்தாளர், ஓவியர் முத்துவின் 28 கதையிலும் இந்த நுட்பம் வெளிப்பட்டிருப்பதுதான் சிறப்பு.
சிறார்களைக் கவரும் விதத்தில் எளிமையான கோடுகளில் ஓவியர் முத்து, அழகான ஓவியங்களை இந்தக் காமிக்ஸ்காக வரைந்துள்ளார். இந்த ஜென் காமிக்ஸ் கதைகள் அற்புதமான கருத்துகளைச் சொல்லும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. என்றாலும்கூட பெற்றோர்கள்/பெரியவர்கள், அதைப் படித்துச் சிறார்களிடம் ஓர் உரையாடலை நிகழ்த்த வேண்டும். அம்மாதிரியான பெரியவர்- சிறார் இடையேயான ஓர் உரையாடலையும் இந்தக் கதைகள் பரிந்துரைக்கின்றன.
Click the link above to read the full article on the original website.


