கோவை: கோவையில் நடந்த சிஐடியு தொழிற்சங்க மாநாட்டில் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளராக எஸ்.கண்ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு தொழிற்சங்கத்தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவையில் தொடங்கியது. தொடர்ந்து நடந்த பொது மாநாடு மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
இரண்டாம் நாள் நடந்த பிரதிநிதிகள் மாநாட்டில், மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன், அகில இந்தியதுணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், விவசாயிகள் சங்கத் தலைவர் டி.ரவீந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.சின்னதுரை, அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் ஆகியோர் பேசினர்.
Click the link above to read the full article on the original website.


