புதுடெல்லி: கொழும்பிலிருந்து மும்பைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். அப்போது 9 காபி பொடி பாக்கெட்களில் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். 4.7 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.47 கோடி ஆகும்.
Click the link above to read the full article on the original website.


