புதுடெல்லி: ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து பதற்றமடைந்த உமர் முகமது நபி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், பதற்றத்தில் முன்கூட்டியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் உமர் முகமது நபி. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயது மருத்துவரான இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்த அதீல் அகமது ராதர் என்பவரும் இவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதீல் அகமது ராதர், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடனும் மற்றொரு உள்ளூர் மதவாத அமைப்புடனும் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.

